Header Ads



சஜித் ஒரு அரசியல் குழந்தையா..? யாரோ சொல்லிக்கொடுத்தது போல பேசினாரா சம்பந்தன்..??

நேற்று காலை 11.00 மணிக்கு சஜித் ஆதரவு கட்சிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தை ஆர்.சம்பந்தனின் வீட்டில் தொடங்கியது.

அமைச்சர் சஜித் அணியின் சார்பில் கிளர்ச்சித் தலைவர் மலிக் சமரவிக்ரம, மங்கள சமரவீர ஆகியோர் கலந்து கொண்டதுடன்,பேச்சுவார்த்தைகளின் ஒருங்கிணைப்புக்காக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவும் கலந்துகொண்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பேச்சுவார்த்தையின் ஆரம்பத்தில் சஜித்தின் குழுவிடம் இலங்கையை அபிவிருத்தி செய்ய அடுத்த 10 ஆண்டுகளுக்கு என்ன திட்டமிட்டுள்ளீர்கள் என்று கேட்டிருந்தனர்.

மேலும், தனிநபர் வருமானம், டொலர் 4,000 மாக எட்டும்போது இலங்கை பெறும் 'நடுத்தர வருமான பொறிக்கு சஜித்தின் தீர்வு என்ன என்பதையும் மேலும் 30 அமைச்சகங்களுக்கு தனித்தனி செயல் திட்டங்கள் உள்ளதா என்பதையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அறிந்து கொண்டனர்.

இதற்கு பதிலளித்த மங்கள சமரவீர, எதிர்காலத்தில் எல்லாவற்றையும் செயல்படுத்த முடியும் என்று கூறியுள்ளார்.

அமைச்சர் சஜித் தேசிய பிரச்சினை பற்றி எதுவும் தெரியாத ஒரு அரசியல் குழந்தை

இனப்பிரச்சினை வரலாற்றைக் கொண்ட, அறிவு, புரிதல், உணர்வுத்திறன் அல்லது அதில் குறைந்தபட்ச அக்கறை இல்லாத அரசியல் குழந்தை சஜித் பிரேமதாசவை அவர் எவ்வாறு ஆதரிப்பது என சம்பந்தன் காட்டமாக கேட்டுள்ளார்.

தனது மக்களை என்றென்றும் ஏமாற்ற அனுமதிக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

இந்த எல்லாவற்றையும் தன்னால் சரிசெய்ய முடியும் என்றும், அவற்றை சரிசெய்யக்கூடிய நபர் சஜித் பிரேமதாச என்றும் மங்கள சமரவீர இதன்போது பதில் கூறியுள்ளார்.

வரலாற்றில் இனப்பிரச்சினை பற்றி ஒரு வார்த்தை கூட பேசாத சஜித் பிரேமதாசவை எவ்வாறு நம்புவது என்று சம்பந்தன் கோபத்துடன் கேட்டுள்ளார்.

வரலாறு முழுவதும் தேர்தல் நேரத்தில் இதுபோன்ற வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மங்களா, ராஜிதா மற்றும் பலர் தேசிய பிரச்சினைக்கு தொடர்ந்து தீர்வு காண முன்வந்துள்ளதுடன், சஜித் பிரேமதாச என்பவர் சொற்களின் அர்த்தத்தையும் அதிகாரப் பகிர்வுக்கான அரசியல் கருத்தையும் அறியாத ஒரு நபர் என்று கூறியதுடன் அமைச்சர் சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க கூடாது என்பதில் மிக அவதானமாக யாரோ கூறிய கருத்துக்களை தனது கருத்தாக நீதிமன்ற வாதத்தில் முன்வைப்பது போல் சம்பந்தன் மிக அவதானமாக சுட்டிக்காட்டினார்.

இதற்கு பதிலளித்த மங்கள சமரவீர, "இல்லை, அது இல்லை. நாங்கள் சஜித்தை உருவாக்க முடியும். நாங்கள் அவரைப் செய்து எடுக்கிறோம் . எங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை மட்டும் கொடுங்கள்.

உங்கள் அனைத்து எம்.பி.க்களும் இதற்கு விருப்பம் அளித்துள்ளனர், சுமந்திரன் மட்டுமே இதை விரும்பவில்லை. சுமந்திரனுக்கு மட்டுமே இது பிடிக்கவில்லை என வெளிப்படையாக கூறியதுடன் அமைச்சர் சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக முன் நிறுத்திய நாள் முதல் சுமந்திரன் தமிழ் மக்கள் ரணிலைத்தான் ஆதரிப்பார்கள் அது மட்டுமல்லாது இது ஐக்கிய தேசியக் கட்சியின் விடையம் என விலகி இருந்து வருவதுடன் அவரின் நிலைப்பாடு பிரதமர் ரணிலின் நிலைப்பாட்டிற்கு ஒத்ததாக உள்ளதாக மறைமுகமாக அமைச்சர் மங்கள சுட்டிக்காட்டினார்.

இதனை அவதானித்த சம்பந்தன் சுமந்திரன் தொடர்பாக பேசியதால் கோபமடைந்துள்ளார் என்பதுடன் அதன் பின்னர் அவர் சரியான முறையில் உரையாடவில்லை என செய்தி வெளியிட்டுள்ள கொழும்பு ஊடகம் பெரும் எதிர்பார்ப்புடன் சென்ற அமைச்சர் சஜித் அணியினரிற்கு பேரிடியான செய்தியே சம்பந்தனிடம் கிடைத்ததாக உரையாடலில் பங்கு பற்றிய தரப்பு கூறியுள்ளது.

2 comments:

  1. Sajith is not suitable ..

    ReplyDelete
  2. சம்பந்தன் ஐயாவிடமிருந்து இந்த நாட்டு முஸ்லிம்களும் குறிப்பாக அரசியல் வாதிகளும் நிறைய பாடங்கள் படிக்கவேண்டும். அற்ப அரசியலுக்கும் குறுகிய இலாபங்களுக்கும் வக்காளத்து வாங்காத அவர்கள் அவர்களுக்கே வரித்துக்கொண்ட கொள்கை,கோட்பாட்டுடன் பயணிப்பவர்கள். எந்த சந்தர்ப்பங்களிலும் எத்தகைய ஆபத்துக்களின்போதும் தங்கள் கொள்கையை விட்டும் சரியாமல் நேராக இருப்பவர்கள். ஏன் இந்த நட்டின் முஸ்லிம் அரசியல் வாதிகள் அந்த மூத்த அரசியல் தலைமையிடமிருந்து பாடங்கள் கற்றுக்கொள்ளக் கூடாது.

    ReplyDelete

Powered by Blogger.