ரணில் - சஜித் இடையில், மீண்டும் ஒரு பேச்சுவார்த்தை
எதிர்வரும் சனிக்கிழமைக்கு முன்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் மீண்டும் ஒரு பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் அதன் போது ஐ தே.க. ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தீர்க்கமான முடிவு எட்டப்படும் என்றும் அமைச்சர்களான ரஞ்சித் மத்துமபண்டார மற்றும் மலிக் சமரவிக்கிரம ஆகியோர் தெரிவித்தனர்.
ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
ஐ.தே.கவுக்குள் எவ்வித பிரச்சினையும் கிடையாது என்றும் இரண்டொரு தினங்களில் பிரதமருக்கும், அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை இடம்பெறும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
லோரன்ஸ் செல்வநாயகம்
Post a Comment