Header Ads



அரசியல்வாதிகளின் பெயர்களை குறிப்பிட்டு, புதையல் அகழ்வு - 8 பேர் கைது

அரசியல்வாதிகளின் பெயர்களை குறிப்பிட்டு புதையல் அகழ்வு - 8 பேர் கைது
கலேவேல, பட்டிவெல பிரதேசத்தில் பாரியளவில் புதையல் அகழ்வில் ஈடுபட்டு வந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நேற்று இரவு (11) தம்புள்ளை பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நாட்டின் பிரபல அரசியல்வாதிகளின் பெயர்களை குறிப்பிட்டு, அவர்கள் புதையல் தோண்டும் பகுதி என தெரிவித்து பொதுமக்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளை தவறாக வழிநடத்தி புதையல் அகழ்வில் ஈடுபட்டு வந்த சிலரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்த குழுவினர் சுமார் இரண்டு மாத காலமாக குறித்த இடத்தில் புதையல் அகழ்வில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், மாதிபொலி, கலேவெல, இஹல பம்பாவ, குருணாகல், அம்பேபுஸ்ஸ, ஹிங்குரங்கொடை மற்றும் மீரிகம பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர். 

இதன்போது, அகழ்விற்காக பயன்படுத்தப்பட்ட பாரிய உபகரணங்களும், வெடிப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் உபகரணங்கள் கலேவெல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் தெரிவித்தனர். 

சந்தேகநபர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

1 comment:

  1. SAJITH IDAM KETTAAL, PUTHAYAL
    SHAMBANDAMAHA, ELLA RAHASHIYANGALAYUM
    THELIVAAKA CHOLVAAR.

    ReplyDelete

Powered by Blogger.