Header Ads



பாலித்தவை விடுவிக்கக்கோரி, கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்


களுத்துறையில் தோட்டத் தொழிலாளி ஒருவரின் சடலத்தை நீதிமன்ற உத்தரவை மீறி காணி ஒன்றில் பலவந்தமாக புதைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும மற்றும் ஐவரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்படுள்ளது.

இந்தப் போராட்டம் இன்று கொழும்பு - கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை முன்னெடுக்கப்படவுள்ளது.

இப்போராட்டத்தினை மலையக இளைஞர்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.