Header Ads



தமது சொந்த கருத்துக்களை கூறுவதனாலே, யானைக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது

தமது சொந்த கருத்துக்களை கூறுவதன் மூலம் கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்தவேண்டாம் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தொழிற்சங்கம் கோரியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களிடம் இந்தக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீகோத்தாவில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது ஐக்கிய தேசியக்கட்சியின் தொழிற்சங்கமான தேசிய தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் ஆனந்த பாலித இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

தமது அமைச்சுப் பணிகளுக்கு ரணில் விக்ரமசிங்க எவ்வித தடங்கலையும் ஏற்படுத்தவில்லை என்று உதவி தலைவர் சஜித் பிரேமதாஸ கூறுகின்ற போதும் மற்றவர்களின் பேச்சுக்கள் அவசியமில்லாதவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.