Header Ads



கட்டாரிலிருந்து வந்த பிரேஸில் பெண் - வயிற்றிலிருந்து 52 கொக்கேய்ன் வில்லைகள் பிடிபட்டன (படம்)

கொக்கேய்ன் வில்லைகளை விழுங்கியவாறு இலங்கை வந்த பிரேஸில் நாட்டை சேர்ந்த பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டாரிலிருந்து வந்த குறித்த பெண் தொடர்பில் சுங்க போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில், அவரை ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்திய போது அவரது வயிற்றில் வில்லைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பின்னர் குறித்த பெண் நீர்கொழும்பு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவரியின் வயிற்றலிருந்து 52 கொக்கேய்ன் வில்லைகள் அகற்றப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.