Header Ads



தௌஹீத் பள்­ளி­வாசல் என்­ப­த­னா­லேயே, தொழு­கைக்கு தடை விதிப்பு

ஹெட்­டி­பொல பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட கொட்­டம்­பிட்டி மஸ்­ஜிதுல் லுஃலு அம்மார் பள்­ளி­வாசல் தொடர்­பாக பொலி­ஸா­ருக்கு முஸ்லிம்கள் எவரும் தவ­றான தக­வல்­களை வழங்கவில்லை. எவரும் அந்தப் பள்­ளி­வா­சலைக் காட்­டிக்­கொ­டுக்­க­வில்லை.

அது தௌஹீத் பள்­ளி­வாசல் என்­ப­த­னா­லேயே பொலிஸார் அங்கு தொழு­கைக்குத் தடை விதித்­தி­ருந்­தார்கள் என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மா­சபை பண்­டு­வஸ்­நு­வர கிளையின் செய­லாளர் மௌலவி ஐ.எல்.எம் ருவைஸ் தெரி­வித்தார்.

கொட்­டாம்­பிட்டி மஸ்­ஜிதுல் லுஃலு அம்மார் பள்­ளி­வா­சலில் பொலிஸார் தொழு­கைக்கு தடை விதித்­துள்­ளமை தொடர்பில் “விடி­வெள்ளி” க்கு விளக்­க­ம­ளிக்­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் விளக்­க­ம­ளிக்­கையில்; ‘கொட்­டாம்­பிட்­டியில் மஸ்­ஜிதுல் ஹுதா, மஸ்­ஜிதுல் லுஃலு அம்மார் என இரு பள்­ளி­வா­சல்கள் இருக்­கின்­றன. மஸ்­ஜிதுல் ஹுதாவே பெரிய பள்­ளி­வாசல். கொட்­டாம்­பிட்­டியில் மொத்தம் 230 குடும்­பங்­களே வாழ்­கின்­றன. மூடப்­பட்­டுள்ள மஸ்­ஜிதுல் லுஃலு அம்­மா­ருக்கு சுமார் 30 பேரே ஜமா­அத்­தாக இருக்­கி­றார்கள். இவ்­விரு பள்­ளி­வா­சலும் 100 மீட்டர் இடை­வெ­ளி­யிலே இருக்­கின்­றன.

இந்­தப்­பள்­ளி­வா­சலை மூடி­விட வேண்டும் என்ற தேவை இங்­குள்ள எவ­ருக்கும் இல்லை. தற்­போது அப்­பள்­ளி­வா­சலில் தொழுகை தடை செய்­யப்­பட்­டி­ருப்­பதால் அப்­பள்­ளி­வாசல் ஜமா­அத்தைச் சேர்ந்த சுமார் பத்து பேர் மஸ்­ஜிதுல் ஹுதா­வுக்கே வந்து தொழு­கி­றார்கள்.

இப்­ப­கு­தியில் நாம் முரண்­பா­டு­க­ளின்றி ஒற்­று­மை­யாக வாழ வேண்டும். மார்க்க கட­மை­களை நிறை­வேற்ற வேண்டும் என்றே கருதுகிறோம். மஸ்ஜிதுல் ஹுதாவுக்கு வந்து தொழ வேண்டாம் என்று எவரிடமும் நாம் கூறவில்லை. பள்ளிவாசல் அனைவருக்கும் பொதுவானதாகும் என்றார்.

vidivelli

3 comments:

  1. நல்லது அதை திறக்காமல் இருப்பதே சிறந்தது

    ReplyDelete
  2. Pray with cap without cup doesn't matter BUT please don't fight.

    Great " Masjid is for All Muslims" Keep it up

    ReplyDelete
  3. நபி வழியில் தொகுகை நடத்தினால் அல்லது நபி வழியில் தொழுபவர்களை தொந்தரவு செய்யாமல் இருந்தால் நமக்கு வேறான பள்ளிவாயலுக்கு அவசியம் கிடையாது.

    ReplyDelete

Powered by Blogger.