Header Ads



மேலாடையின்றி வீதியில் நடந்துசென்ற வெளிநாட்டுப் பெண்


பொத்துவில் பிரதேசத்தில் மேலாடையின்றி வீதியில் நடந்து சென்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


பொலிஸ் நிலைய மகளிர் பணியகத்தால் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.


பீச் ஹொட் ஹோட்டலில் இருந்து ஓஷன் ஸ்கை ஹோட்டலின் நுழைவாயில் வரை அவர் மேலாடையின்றி நடந்து சென்றுள்ளார்.


அந்தப் பெண் தாய்லாந்து பெண் என பொத்துவில் பொலிஸ் நிலைய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


பொத்துவில் பொலிஸ் நிலையத்தின் பெண் அதிகாரிகள் குழு சென்று குறித்த பெண்ணை கைது செய்தனர்.


அந்தப் பெண் பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

No comments

Powered by Blogger.