Header Ads



முஸ்லிம்களிடம் இருந்து தப்புவதற்கு, சிங்களவர்களுடன் கைசேர்க்கும் எண்ணம் உள்ளது - இரா.மயூரன்

மட்டக்களப்பு - வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கதிரவெளி கிராமத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயற்பாடுகள் தொடர்பில் அறிவுறுத்தும், மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் மக்கள் சந்திப்பு இன்றைய தினம் -21- இடம்பெற்றுள்ளது.

இதன்போது வட தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு உறுப்பினர் இரா.மயூரன் கருத்து தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாண மக்கள் முஸ்லிம்களிடம் இருந்து தப்புவதற்கு சிங்களவர்களுடன் கைசேர்க்கும் எண்ணம் உள்ளதை அறியக் கூடியதாக காணப்படுகின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் அடிபணிவு போக்கு காரணமாக கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் முஸ்லிம்களால் பாதிப்பை சந்தித்துக் கொண்டிருக்கின்றீர்கள்.

இவர்களிடம் இருந்து தப்புவதற்கு சிங்களவர்களுடன் கைசேர்ந்தால் என்ன என்று கிழக்கு மாகாண மக்கள் மனதில் உள்ளதாக அறியக் கூடியதாக உள்ளது. கிழக்கு மாகாணத்தில் உள்ளவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பால் கைவிடப்பட்ட நிலையில் உள்ளீர்கள். இணக்க அரசியல் எக்காலத்தில் வெற்றி பெற போவதில்லை.

30 வருட விடுதலைப் போராட்டத்தில் மக்களை பிரிக்க வேண்டும் என்பதற்காக இணக்க அரசியலை அரசாங்கம் கையில் எடுத்தது என அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது, தமிழ் மக்கள் கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எஸ்.சோமசுந்தரம் கருத்து தெரிவிக்கையில்,

வடக்கு மற்றும் கிழக்கில் தமிழன் வீரமுள்ள தமிழாக வாழ வேண்டும் என்பதற்காக நாங்கள் செயற்பட்டு வருகின்றோம்.

வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் பூர்வீக தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்கவே நாங்கள் முன்வந்துள்ளோம். நாங்கள் தேர்தலுக்காக வரவில்லை.

எமது மக்களின் பிரச்சினைகளை கண்டறிந்து கொள்வதற்கான வந்துள்ளோம்.

கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் நாம் எல்லாவற்றையும் இழந்து விட்டோம். ஏன் நாளுக்கு நாள் எமது காணிகளையும் இழந்து கொண்டு வருகின்றோம் என கேள்வி எழுப்பியுள்ளார்.

4 comments:

  1. உங்களுடன் சிங்களவர்கள் இணைவது நடக்காத காரியம்

    ReplyDelete
  2. ஆயிரக்கணக்கான ஏக்கர் தமிழ்மக்களிடமே இன்னும் உள்ளது.Loosuppayale மாவட்ட செயலகத்தில் போய் பார். ஆதரம் தெளிவா இருக்கு

    ReplyDelete
  3. கருநாய் சிங்களவர்களுடன் இனைந்து தமிழ் போராளிகளையும் அப்பாவி மக்களையும் கொன்று அழித்தான்.
    அதே போன்று நீயும் உன் போன்ற சில கேவலம் கெட்டவர்களும் எஞ்சியுள்ள மக்களுக்கு ம் அதேமாதிரி ஒரு நிலமையை ஏற்பாடு செய்து கொடு.

    ReplyDelete
  4. நடத்துப்பா நடத்து. நீயே தற்கொலை பண்ணிக்கப்பார்கிறாய். எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். வேறு என்ன தான் பண்ண முடியும்.

    ReplyDelete

Powered by Blogger.