Header Ads



சஹ்ரானின் ஆயுதப் பிரி­வுக்கு பொறுப்­பான, மில்ஹானைத் தேடி வேட்டை


(எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்த ஞாயி­றன்று இலங்­கையில் இடம்­பெற்ற தொடர் தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­த­லுடன் தொடர்­பு­டைய பிர­தான சந்­தேக நபர் ஒரு­வரைக் கைதுசெய்ய சி.ஐ.டி. சிறப்பு விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளது.  

குறித்த கொடூர தாக்­கு­தல்­களை நடத்­திய தேசிய தெளஹீத் ஜமா அத் எனும் அமைப்பின் ஸ்தாபகர் சஹ்ரான் ஹாஷிம் எனும் பயங்­க­ர­வா­தியின் கீழ் செயற்­பட்ட குழுவின் ஆயுதப் பிரி­வுக்கு பொறுப்­பாக இருந்­த­வ­ராக கரு­தப்­படும் மில்ஹான் எனும் நபரைத் தேடியே இந்த விசா­ர­ணைகள் இடம்­பெ­று­வ­தாக பாது­காப்பு உயர்­மட்ட தக­வல்கள் கேச­ரிக்கு வெளிப்­ப­டுத்­தின. 

மில்ஹான் எனும் குறித்த நபர்  தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­க­ளுக்கு முன்னர் சவூதி அரே­பி­யா­வுக்கு  உம்­ரா­வுக்­காக சென்­றுள்­ள­தாக சி.ஐ.டி.க்கு தகவல் கிடைக்கப் பெற்­றுள்ள நிலையில், அவர் மீள இலங்­கைக்கு திரும்­ப­வில்லை எனவும் அவ­ரது பயணப் பொதி மட்டும் இலங்­கைக்கு வந்­துள்­ள­தா­கவும் அந்த தக­வல்கள் குறிப்­பிட்­டன. அதன்­படி மில்­ஹானைக் கைது செய்ய சிறப்புத் திட்டம் வகுக்­கப்­பட்­டுள்­ளது.

 குறித்த சந்­தேக நபர், யுத்த காலத்தில் காத்­தான்­கு­டியில் இயங்­கி­ய­தாக நம்­பப்­படும் துணை  ஆயுதப் படை­களில் இருந்­தவர் என தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலையில்,  வவு­ண­தீவு, பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் கொலை­யி­னையும் அவரே  நெறிப்­ப­டுத்­தி­யுள்­ள­தா­கவும்  தகவ்ல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

இதே­வேளை, உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று தற்­கொலைத் தாக்­கு­தல்கள் தொடர்பில் பிர­தான விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும், சி.ஐ.டி. எனும் குற்றப் புல­னாய்வுப் பிரிவு, சி.ரி.ஐ.டி. எனும் பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரிவு ஆகி­யன அவை தொடர்பில்  சுமார் 68 பேரை பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் தடுத்து வைத்து  விசா­ரித்து  வரு­கின்­றன . அவர்­களில்  குறித்த தற்­கொலை தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்­பு­பட்ட அல்­லது அவற்றை நெறிப்­ப­டுத்­திய பிர­தான சந்­தேக நபர்கள் 8 பேர் அடங்­கு­வ­தாக  உயர்­மட்ட விசா­ரணை தக­வல்கள் ஊடாக தெரி­ய­வ­ரு­கின்­றது.

இதே­வேளை மட்­டக்­க­ளப்பு - மன்­முனைப் பற்று , ஒல்­லிக்­குளம் பகு­தியில் தேசிய தெளஹீத் ஜமா அத் ஸ்தாபகர் சஹ்ரான் ஹாஷிமின் சகோ­த­ரான சாய்ந்­த­ம­ருது தற்­கொலை தாக்­கு­தல்­களில் கொல்­லப்­பட்ட  ரில்­வானின் கீழ் இயங்­கி­ய­தாக  கூறப்­படும் பயிற்சி முகாம் ஒன்று கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. சுமார் 15 ஏக்­கர்கள் கொண்ட விசா­ல­மான இடப்­ப­ரப்பைக் கொண்ட இந்த இடம் பொலிஸ் மற்றும் பொலிஸ் விஷேட அதி­ரடிப் படை­யி­னரின் சிறப்புக் குழு­வி­னரால் சுற்­றி­வ­லைக்­கப்­பட்­டது. இதன்­போது சந்­தேக நபர் ஒருவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார். 

இதே­வேளை, உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பிர­தான சந்­தே­க­ந­ப­ரான சஹ்ரான் ஹசிமின் மைத்­துனர் என கூறப்­படும் மெல­ளானா  ரிலா, மற்றும் அவ­ரது சகா­வாக கரு­தப்­படும்  ஷஹ்­னவாஜ் எனும் நபர் ஆகியோர் சவுதி அரே­பி­யாவில் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக இந்­திய ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன. ஹிந்­துஸ்தான் டைம்ஸ் பத்­தி­ரி­கையில் இந்த  செய்தி வெ ளியி­டப்­பட்­டுள்­ளது.

இந்­திய உள­வுத்­துறை கொடுத்த தகவல் பிர­காரம் அவர்கள் கைது செய்­யப்­பட்­ட­தா­கவும் அவர்களுக்கும் நாட்டிலுள்ள ஐ.எஸ் பயங்கரவாதிகள் மற்றும் கேரளாவில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளுக்கு இடையில் தொடர்புள்ளதா என்பது குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதற்கு இந்திய அதிகாரிகள், சவுதி அரேபிய அதிகாரிகளுடன் ஒன்றிணைந்து செயற்படுவதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.