Header Ads



சேதமடைந்த பள்ளிவாசல்கள் புனரமைத்து தரப்படும் - விபரங்களை தருமாறு சஜித் பணிப்பு

குரு­நாகல், புத்­தளம் மற்றும் கம்­பஹா ஆகிய மாவட்­டங்­களில் கடந்த வாரம் இன­வா­தி­களால் தாக்­கப்­பட்டு பகு­தி­ய­ளவில் அல்­லது முழு­மை­யாக சேத­ம­டைந்த அனைத்து பள்­ளி­வா­சல்­களும் புன­ர­மைத்து தரப்­ப­டு­மென வீட­மைப்பு, நிர்­மா­ணத்­துறை மற்றும் கலா­சார விவ­கார அமைச்சர் சஜித் பிரே­ம­தாஸ தெரி­வித்­துள்ளார். 

அத்­துடன் சேத­ம­டைந்த பள்­ளி­வா­சல்­களின் விப­ரங்­களை தரு­மாறு முஸ்லிம் சமய விவ­கார அமைச்சு மற்றும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் என்­ப­வற்­றிடம் கோரிக்கை விடுத்­துள்ளார்.

அமைச்சர் சஜித் பிரே­ம­தாஸ மற்றும் வீட­மைப்பு, நிர்­மா­ணத்­துறை மற்றும் கலா­சார விவ­கார அமைச்சின் அதி­கா­ரி­க­ளுக்­கி­டையே நேற்­றைய தினம் அமைச்சில் கலந்­து­ரை­யா­ட­லொன்று இடம்­பெற்­றது.

இதன்­போது, மத்­திய கலா­சார நிதி­யத்தின் ஒதுக்­கீட்டில் வடமேல் மாகாணம் மற்றும் கம்­பஹா மாவட்­டத்தில் தாக்­கு­த­லுக்­குள்­ளான பள்­ளி­வா­சல்­களை நிர்­மா­ணித்துக் கொடுப்­ப­தற்­கான யோச­னையை அமைச்சர் சஜித் பிரே­ம­தாஸ முன்­வைத்­துள்ளார். அத்­துடன், பாதிக்­கப்­பட்ட பள்­ளி­வா­சல்கள் தொடர்­பி­லான விப­ரங்­களை திரட்­டு­மாறும் அதி­கா­ரி­க­ளுக்கு பணித்­துள்ளார்.

இத­னி­டையே, முஸ்லிம் சமய விவ­கார அமைச்சுடன் தொடர்புகொண்டு பாதிப்புக்குள்ளான பள்ளிவாசல்கள் தொடர்பிலான முழு அறிக்கையும் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. நீங்களே அடித்து உடைப்பீர்கள் இறுதியில் நீங்களே அதனைக் கட்டி கொடுப்ிர்கள் என்றால் இதெல்லாம் எங்கிருந்து வரும் காசு,பாப்பா பிரேமதாசாவின் காசா மகனே? இதெல்லாம் நாங்கள் நாட்டு மக்கள் செலுத்தும் வரி பணங்கள் மகனே.

    ReplyDelete
  2. முஸ்லிம்களே அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள் அல்லாஹ்வுடைய மாளிகைகள் புனரமைப்பதாக இருந்தால் அது முஸ்லிம்களின் ஹலாலான பணத்தில் மட்டும்தான் சேரவேண்டும் ஹராத்தை பயன்படுத்தினால் அல்லாஹ்வின் கோபத்துக்கு ஆளாகிவிடுவீர்கள் அல்லாஹ் பாதுகாக்கவேண்டும்

    ReplyDelete

Powered by Blogger.