Header Ads



70 வீத சிங்களவர் வேலைசெய்த முஸ்லிமுக்கு சொந்தமான இலங்கையின், மிகப்பெரிய பாஸ்தா தொழிற்சாலை குண்டர்களினால் தீக்கிரை - 700 மில்லியன் நாசம் (Full Report)


மினுவாங்கொட பகுதியில் அமைந்திருந்த, இலங்கையின் மிகப்பெரும்  பாஸ்தா உற்பத்தி தொழிற்சாலை குண்டர்களினால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது. 

இத்தொழிற்சாலையில் 70 சதவீதமான ஊழியர்கள் சிங்களவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கட்கிழமை இரவு தொழிற்சாலையை சுமார் 200 குண்டர்கள் தாக்க ஆரம்பித்துள்ளனர். 

தமது தொழிற்சாலை தாக்கப்படும் போது, தொழிற்சாலை முகாமைத்துவம் உடனடியாக அதனை பொலிசாருக்கு அறியப்படுத்தியுள்ளனர். எனினும் 200 குண்டர்களை கட்டுப்படுத்த சுமார் பொலிசாரே வருகை தந்துள்ளனர். இதன்போது ஊழியர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

தொழிற்சாலை முழுவதுமாக அழிந்துவிட்டது, எதுவும் மீட்கப்படவில்லை. இத்தாக்குதலின் போது ஏழு ஊழியர்கள் அந்த தொழிற்சாலைக்குள் இருந்தனர்,  ஆனால் இப்பொழுது அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர்,

வைர பாஸ்தா பெரும்பான்மை சிங்களவர்களுடன், அனைத்து மதங்களுடனும் 30 ஊழியர்களைப் பணியில் அமர்த்தியுள்ளது, 

இந்த தாக்குதல் சம்பவத்திற்காக நாங்கள், சிங்கள மக்களை நாங்கள் கண்டிக்கவில்லை, இந்த அதிருப்தி நடவடிக்கையை செய்த குண்டர்களையே கண்டிப்பதாக தொழிற்சாலை நிர்வாகம் கூறியுள்ளது.

அத்துடன் இச்சம்பவத்தினால்  தாங்கள் விரக்தியடைந்துள்ளதாகவும், முக்கிய ஊடகங்கள் எதுவும் இங்கு நடப்பதில் ஆர்வத்தை காட்டவில்லை எனவும் தொழிற்சாலை நிர்வாகம் கவலை வெளியிட்டுள்ளது.

நிறுவனத்தின் மதிப்பீட்டின் அளவு ரூ. 700 மில்லியன், இயந்திரங்கள், கட்டிடங்கள், மற்றும் பங்குகள் உட்பட நாசமடைந்துள்ளன.



5 comments:

  1. மனதுக்கு மிகவும் வேதனை அளிக்கிறது இந்த செய்தி . உண்மையான தொழிலுக்கு மதிப்பளிப்பவர்களாக பெரும்பான்மை தொழிலாளர்கள இருந்திருந்தால் இந்த தொழில் நிறுவனத்துக்கு அவர்கள் பாதுகாப்பளித்திருத்தல் வேண்டும் .ஏனய்யா தொழில் அதிபர்களுக்கும் இது ஒரு பாடம் .

    ReplyDelete
  2. Terrorist channels in Sri Lanka are happy and sleeping.. They will not show this kind of terrorism as it is done by their people.

    ReplyDelete
  3. - இதைப் பாதுகாகக்த் தவரிய பொலீஸ் மற்றும் இரணுவ அதிகாரிகளின் சம்பளத்தில் இருந்து இந்த நிறுவனத்திற்கு வழங்குங்கள் . தாக்கியவர்களை தண்க்க நடவடிக்கை எடுக்கவும். சக்தி டிவி.மக்களை துாண்டி விட்டு இப்படியான போராட்டங்களை நடத்தவிட்டதானால் மகா ராஜா நிறுவனத்திடம் இருந்த நிதியை அறவீடு செய்யுங்கள். பாராளுமன்ற உறுப்பினர்கள வாய்தி திறந்து பேசுங்கடப்பா

    ReplyDelete

  4. اللهُمَّ أَعِزَّ الإِسْلامَ وَالمُسْلِمِينَ، اللهُمَّ أَعِزَّ الإِسْلامَ وَالمُسْلِمِينَ، وَأَذِلَّ الشِّرْكَ وَالمُشْرِكِينَ وَدَمِّرْ أَعْدآءَ الدِّينِ وَاحْمِ حَوْزَةَ الإسْلامِ يَا رَبَّ العَالَمِينَ. Allahumma a'izzal-Islama wal-Muslimeen, Allahumma a'izzal-Islama wal-Muslimeen, wa adhillash-shirka wal-Mushrikeen, wa dammir a'daa’ad-deen, wahmi hawzatal-Islami ya rabbal-3alameen.

    O Allah! Raise the standing of Islam and the Muslims. O Allah! Raise the standing and the Muslims, and degrade the standing of Kufr and the Kaafireen, and Shirk and the Mushrikeen. Destroy the enemies of the Deen, and protect the lands of Islam, O Lord of the Worlds.

    ReplyDelete

Powered by Blogger.