Header Ads



100 க்கும் மேற்பட்டவர்கள், பலியாகியிருக்கலாமென அச்சம்


சிறிலங்காவில் இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் சுமார் 100 வரையானோர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில், நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில்,  50 பேர் கொல்லப்பட்டனர் என்று கூறப்படுகிறது.

மட்டக்களப்பு -சீயோன் தேவாலயத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில்  25 பேர் கொல்லப்பட்டு,75 பேர் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, மட்டு. போதனா மருத்துவமனை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, கொழும்பில்  கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம் மற்றும் ஆடம்பர விடுதிகளில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில், கொல்லப்பட்ட 24 பேரின் சடலங்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலய குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் உடல் பாகங்கள் அங்கு சிதறிக்கிடப்பதாக, சம்பவ இடத்துக்குச் சென்ற அமைச்சர் ஹர்ஷ டி சில்வா பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

இன்றைய குண்டுவெடிப்புகளில் 100இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

7 comments:

  1. இதில் சம்பந்தப்பட்ட மிருகங்கள் யாராக இருந்தாலும் நடு வீதியில் வைத்து சுட்டுக் கொல்ல வேண்டும்.இது மிருகத்தனமான தாக்குதல்.மன்னிக்க முடியாத குற்றம்

    ReplyDelete
  2. Ajan நாங்களும் இதனை கண்டிக்கிறோம்.ஆனால் Sri Lanka அரசும்,பாதுகாப்பு தரப்பும் உத்தியோகபூர்வமக விசாரனை செய்து அறிவிக்கும் முன் நீர் கூறும் கருத்து தவறு.இப்படியான கருத்துக்கள் மக்களை தவறான வழிக்கு இட்டுச்செல்லும்

    ReplyDelete
  3. ISIS இலங்கையில் இருப்பதாக சொல்கிறார்கள். இலங்கை பாதுகாப்பு படை இந்த சந்தர்ப்பத்தில் இவர்களை பிடிக்கவேண்டும். பிடிக்கமுடிடியாவிடின் அப்படி இருப்பதாக சொல்பவர்களிடம் விசாரிக்கலாம்.

    ReplyDelete
  4. Whoever this killers. We ask Allah to punish them for killing this innocents people.

    ReplyDelete
  5. Jaffna muslim should report Ajan's details to Sri Lankan CID. He is saying definitely ISIS that means he has some link with that particular group.

    ReplyDelete
  6. Yes ajan know everything.should need investigation with ajan.so everyone informed to CID.Ajan know everything

    ReplyDelete

Powered by Blogger.