Header Ads



சுவிட்சர்லாந்தில் 7 வயது முஸ்லிம் சிறுவன் குத்திக்கொலை - 75 வயது பெண்மணி சரணடைந்தார்

1

சுவிட்சர்லாந்தின் பாஸல் பகுதியில் 7 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்த வழக்கில் 75 வயது பெண்மணி ஒருவர் பொலிஸில் சரணடைந்துள்ளார்.

பாஸல் நகரின் St Galler-Ring பகுதியில் பட்டப்பகலில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுவன் பாடசாலையில் இருந்து தனியாக குடியிருப்புக்கு திரும்பியுள்ளான்.

இந்த நிலையில் St Galler-Ring பகுதியில் வைத்து திடீரென்று சிறுவன் தாக்கப்பட்டுள்ளான்.

கழுத்தில் படுகாயத்துடன் குற்றுயிராக கிடந்த சிறுவனை அந்த வழியாக கடந்து சென்ற ஆசிரியர் மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளார்.

ஆனால் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் வைத்து சிறுவன் மரணமடைந்துள்ளான்.

இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பாஸல் நகர பொலிசார், குற்றவாளி தொடர்பில் தீவிரமாக தேடியுள்ளனர்.

இந்த நிலையில் 75 வயது மதிக்கத்தக்க சுவிஸ் பெண்மணி ஒருவர் தாமே முன்வந்து, அந்த சிறுவனை தாக்கியதாக கூறி சரணடைந்துள்ளார்.

மரணமடைந்த சிறுவன் கொசோவோ அல்பேனியன் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் இச்சம்பவத்திற்கு தொடர்புடைய காரணம் என்ன என்பது இதுவரை வெளியாகவில்லை. கைதான பெண்மணியிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

2

சுவிட்சர்லாந்தின் பாஸல் நகரில் பட்டப்பகலில் பெண்மணி ஒருவரால் படுகொலை செய்யப்பட்ட சிறுவனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் ஆர்காவ் பகுதியில் குடியிருக்கும் Emi Salahi என்பவர் விடுத்த அழைப்பை ஏற்று ஆயிரக்கணக்கான மக்கள் இறுதி அஞ்சலி ஊர்வலத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

கொல்லப்பட்ட சிறுவன் இலியாஸ் தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கொசோவோவில் பிறந்தவர் என்பதால், அவரது உறவினர்கள் சிறுவனின் சடலத்தை பிறந்த நாட்டுக்கே எடுத்துச் சென்று நல்லடக்கம் செய்துள்ளனர்.

குறித்த சிறுவனின் நினைவாக பாஸல் நகரில் பெருந்திரளான மக்கள் இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டுள்ளது தங்களால் மறக்க முடியாத நிகழ்வு என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் நேரப்படி சுமார் 2.20 மணியளவில் துவங்கிய இந்த இறுதி அஞ்சலி ஊர்வலத்தில் முக்கிய பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த இக்கட்டான நேரத்தில் சிறுவனின் உறவினர்களும் குடும்பத்தாரும் தனித்துவிடப்படவில்லை, அவர்களுடன் நாங்கள் இருக்கிறோம் என்பதை உணர்த்தவே இந்த நிகழ்வில் கலந்துகொண்டதாக பெடரல் கவுன்சில் தலைவர் எலிசபெத் ஆர்க்கர்மான் தெரிவித்துள்ளார்.

7 வயதேயான சிறுவனின் இழப்பு பாஸல் நகரை கடந்து சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, குவிந்த பொதுமக்களின் எண்ணிக்கையில் இருந்து தெரியவந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இலியாஸ் இனி அந்த பாடசாலைக்கு செல்ல முடியாது, ஆனால் அவனை எங்களால் மறக்க முடியாது என பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.




No comments

Powered by Blogger.