Header Ads



அமித்திற்கான விளக்கமறியல் நீடிப்பு

கண்டியில் கடந்த மார்ச் மாதம் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மஹாசோன் பலக்காய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க உட்பட 8 சந்தேகநபர்களை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சந்தேகநபர்கள் இன்று தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 19ஆம் திகதி வரை அவர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு தெல்தெனிய நீதவான் சானக்க கலன்சூரிய உத்தரவிட்டுள்ளார்.

பயங்கரவாத விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் சந்தேகநபர்கள் தொடர்பில் நடத்தி வரும் விசாரணைகள் தொடர்பான அறிக்கையை இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இதனையடுத்து சந்தேகநபர்களை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான், அன்றைய தினம் வரை வழக்கு விசாரணைகளை ஒத்திவைத்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.