Header Ads



எங்களை துன்புறுத்திய, ராஜபக்ஸக்களை வெளியேற்றினோம் - மாவை சேனாதிராஜா

நாங்கள் இந்த புதிய அரசையும் நம்பி நடக்கவில்லை என தமிழரசுக்கட்சியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட அலுவலகமாக தாயத்தினை இன்று (24.1) காலை திறந்து வைத்து உiராயற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவிக்கையில்,

இந்த தேசத்தில் குறிப்பாக தமிழர், முஸ்லிம்கள், மலையக மக்கள் வாழுகின்ற இடங்களில் ஒரு புதிய நம்பிக்கை உருவாகியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ராஜபக்ஸவின் காலத்தில் சர்வாதிகாரம் தலைதூக்கியிருந்தது. தென்னிலங்கையில் நிறைவேற்று அதிகாரம் உள்ள ஜனாதிபதி முறையை நீக்க வேண்டும் என்றும் குடும்ப ஆட்சியையும் அவர்களது ஊழல்களுக்கு எதிராகவும் கிளர்தெழுந்துள்ளார்கள். தமிழ், முஸ்லிம், மலையக மக்கள் கூட இந்த ராஜபக்ஸ ஆட்சியில் தமது நிலம், மதம், பண்பாடு, ஜனநாயகம் என்பவற்றை இழந்து நிர்கதியாக்கப்பட்டனர். எமது இந்த உரிமைக்காக எத்தனை எத்தனை உயிர்களை கொடுத்தோம். எத்தனை போராட்டங்களை நடத்தினோம். இராணுவ மயமாக்கலை செய்த அந்த அரசாங்கம் எமது இன அடையாளங்களையே அழித்தது. இதனால் எமது மக்கள் கண்ணீரும் கம்பளையும் ஆக இருந்தனர். தென்னிலங்கையில் இருந்து இந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என குரல் வலுத்த போது நாங்கள் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்காகவும் இந்த மோசமான ஆட்சியை மாற்ற வேண்டும் என்பதற்காகவும்  ஆதரவு கொடுக்க வேண்டியிருந்தது.

எமது நிலங்களை இராணுவத்தின் துணையுடன் பறித்து அங்கு சிங்களவர்களையும் இராணுவ குடும்பங்களையும் குடியமர்த்தினார்கள். இதற்கு இந்த மஹிந்தாவின் ஆட்சி தான் காரணமாக அமைந்தது. எமது நிலத்தை நாம் பயன்படுத்த முடியாது எமது அடையாளத்தையும் அழிக்கும் நடவடிக்கை இடம்பெற்ற போது தான் இந்த ஆட்சியை மாற்ற கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது. எமது மக்களுக்காக மரணித்தவர்களின் கல்லறைகள் கூட தேடி அழிக்கப்பட்டு அங்கு சிங்கள அடையாளங்கள் பொறிக்கப்பட்டன. இந்த நேரத்தில் தான் எமக்கு ஒரு சந்தர்ப்பம் வந்தது. இத்தனை ஆண்டுகளாக எந்த இலட்சியத்திற்காக போராடினமோ? லட்சணக்கணக்கான மக்கள் எந்த இலட்சியத்திற்காக மரணித்தார்களோ எதற்காக எமது மக்கள் படுகொலை செய்யப்பட்டார்களோ? அந்த உணர்வில் தான் எமது மக்கள் மாகாணசபை வந்த போது அதில் உள்ள நன்மை தீமைகளை பாராது மிக்கூடுதலாக வாக்களித்தார்கள்.

அந்த மக்களின் ஜனநாயக தீர்ப்பை மதிக்காது இந்த அரசாங்கம் செயற்பட்டதால் தான் எமது மக்களும் சிங்கள மக்கள் ராஜபக்ஸவுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த போது  சாதாகமாக பயன்படுத்தி தாமும் பெருமளவு வாக்கினை மைத்திரிக்கு வழங்கி ராஜபக்ஸவை வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார்கள்.

இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம் எடுப்பதற்கு முன்னர் கருத்துக்களை கேட்ட போது இது ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானம் என கூறினார்கள். இது அப்பட்டமான பொய். தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாவட்ட ரீதியாக உள்ளூராட்சி சபை உறுப்பினர்களிடம் கட்சி உறுப்பினர்களிடம் கருத்து கேட்டோம். குறிப்பாக தமிழரசுக் கட்சி அதன் கிளைக்கூட்டி கருத்துக்களை கேட்டது. பல வெளிநாட்டு ராஜதந்திரிகளை சந்தித்தோம். அவர்களிடமும் கருத்து கேட்டோம். அந்த தீர்மானத்தின் அடிப்படையிலேயே இராஜதந்திர ரீதியாக எடுக்கப்பட்ட எமது முடிவை மஹிந்தா இனவாத ரீதியாக விமர்சிக்க காலம் வழங்காது அறிவித்தோம்.

தென் இலங்கையில் ஏற்பட்ட இந்த கிளர்ச்சி சர்வதேச ரீதியில் செல்வாக்கு செலுத்தியது. அதனால் தான் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் எல்லாம் கவனம் செலுத்தின. நாம் அவர்களிடம் கதைத்தோம். அதன் அடிப்படையிலேயே எமது முடிவையும் வெளியிட்டோம். மக்கள் எமது கருத்தை கேட்டார்கள். அதனால் பெருவாரியாக வாக்களித்தார்கள். தேர்தலை எதிர்கொள்ளாது விடின் அரசியல் கட்சியாக இருக்க முடியாது. அதனாலேயே எமது முடிவை அறிவித்தோம். மைத்திரியை ஆதரித்தோம். எங்களை துன்புறுத்திய எங்களை வெளியேற்றிய ராஜபக்ஸக்களை வெளியேற்றினோம்.

நாம் எதற்காக இதுவரை போராடினோமா? அதை பெற வேண்டுமானால் எமது நிலம் எமது நிலமாக இருக்க வேண்டும். அதை அழித்தவனையே நாம் தோற்கடித்தோம். நாங்களும் தேசிய இனம். எங்களுக்கும் இறைமை இருக்கிறது. எங்களாலும் ஆட்சியாளரை தீர்மானிக்க முடியும் என்பதை இந்த ராஜபக்ஸவுக்கு காட்டியுள்ளோம்.

நாம் இதில் இருந்து விடுதலை பெறவேண்டும். எமது நிலத்தையும் அடையாளத்தையும் காப்பாற்றினால் தான் எமது உரிமைகளை பெறமுடியும். இந்த துன்பதற்கு காணமான ராஜபக்ஸவை விரட்ட எடுத்த முடிவு சரியானதே. நாம் இந்த முடிவை எடுத்திராவிட்டால் இன்னும் 8 வருடங்கள் இருந்திருப்பார். 5 வருடங்களுக்குள்ளேயே எமது அடையாளங்கள் முழுமையாக அழிக்கப்பட்டிருக்கும். இதனை விளங்ககிக் கொள்ளாதா சிலர் தேர்தலை புறக்கணியுங்கள், தேர்தலில் யாருக்கும் ஆதரிக்காதீர்கள், பகிஸ்கரியுங்கள் என்று கூறினார்கள்.

இந் நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு ராஜபக்ஸவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என கூறிய பின் கூட சில பத்திரிகை மாநாடுகளை நடத்தி இந்த தேர்தலை புறக்கணிக்க சொன்னார்கள். எமது தீர்மானங்கள் எடுக்கப்பட்ட போது கூட இருந்த சிலரும் போய் விமர்சித்தார்கள். சிலர் வாக்காளிக்காது விட்டார்கள். ஆனால், அவர்களின் கருத்துக்கள் எடுபடவில்லை. இனியும் எடுபடாது. அவர்களின் கருத்தை நம்பியிருந்தால் இன்று ராஜபக்ஸ இருந்திருப்பார். அதன் பின் என்ன நடந்திருக்கும்? அதனை சிந்தித்து பார்க்க வேண்டும்.


தமிழ் மக்களால் அன்று ஆட்சிக்கு வந்தவர் தமிழ் மக்களால் இன்று ஆட்சி இழந்து தனது சொத்துகளை இழந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார். தினமும் மோசடிகள் வெளிவருகின்றன. எங்களை அடக்கியவர் இன்று அடங்கிப் போய் இருகிறார். இந்த நிலைக்கு நாம் வாக்களித்தமையே காரணம். ராஜபக்ஷவுக்கு எதிரான போர்குற்ற விசாரணைகள் வரக்கூடாது என்பதற்காகவே வாக்களிக்டக கூடாது என்று சொன்னார்கள்.

நாங்கள் இந்த புதிய அரசையும் நம்பி நடக்கவில்லை. அந்த அரசுடன் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை. ஆனால் தற்போது எமது மக்களின் காணிப்பிரச்சனை, அரசியல் கைதிகள் பிரச்சனை, தீர்வுத் திட்டம் குறித்து பேசி வருகின்றோம். அவர்களும் சிலதை செய்கிறார்கள். செய்வதாக கூறுகிறார்கள். நாம் வவுனியாவில் நடந்த கட்சி மாநாட்டில் இந்த அரசசு எமது பிரச்சனையை தீர்க்காது போனால் தைத்திங்களில் ஜனநாயக போராட்டம் வெடிக்கும் என தெரிவித்தோம். ஆனால் இன்று புதிய அரசு வந்துள்ளது. சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. மீள்குடியேற்றுவதாக சொல்கிறார்கள். வடமாகாணசபையில் மாற்றம் வந்துள்ளது. காணிகளை வழங்குவதாக கூறியுள்ளார்கள். இதனால் எமது பிரச்சனையை தீர்க்க காலம் தேவை. அதனை நாம் வழங்கி எமது போராட்டத்தை பிற்போட்டுள்ளோம். எமக்கு தீர்வு கிடைக்காது போனால் எமது மக்களை தயார்படுத்தி கூறியபடி எமது ஜனநாயக போராட்டம் நடக்கும் அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். இது ஒரு பரீட்சார்த்த காலம். சர்வதேச ஒத்துழைப்புடனயே நாம் செயற்பட்டோம். எனவே எமக்கான தீர்வு வராது விடின் எமது போராட்டம் தொடரும் எனத் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.