Header Ads



சவூதி அரேபிய தமாமில் 40 இலங்கையர்கள் தடுத்துவைப்பு

NF

சவூதி அரேபியாவின் தமாம் நகரிலுள்ள 91 ஆம் இலக்க முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைப் பணியாளர்கள் பெரும் அசெளகரியத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சட்டரீதியாக தொழில் வாய்ப்புக்களை தேடி சவூதி சென்ற சுமார் 40 இலங்கை பணியாளர்கள் குறித்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சிறு குற்றங்களுக்காக தாம் 91ஆம் இலக்க முகாமிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

எவ்வாறாயினும் தமது பிரச்சினைகள் குறித்து இலங்கை தூதரக அதிகாரிகளுக்கு அறிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என அவர்கள தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் அமல் சேனாதிலங்காரவிடம் வினவியபோது, இலங்கை பணியாளர்கள் தொடர்பில் உடனடியாக விசேட கவனம் செலுத்துவதாக உறுதியளித்தார்.

No comments

Powered by Blogger.