NPP அரசாங்கம் ஒரு இனத்திற்கோ, மதத்திற்கோ மட்டும் சொந்தமாதல்ல
அனைவருடைய கலாச்சாரத்தையும் மதிக்கும் NPP அரசாங்கம். பாடசாலைக்கு செல்லும் முஸ்லிம் மாணவிகளின் பாடசாலை சீருடைக்குத் தேவையான முக்காடு (தலைக்கவசம்) துணி வழங்கப்படுவதற்கான ஏற்பாடு, அன்றைய கலாச்சார அமைச்சராக இருந்த விஜித ஹேரத்தினால் அவர்களால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இது ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கான சலுகை அல்ல. இலங்கையில் வாழும் அனைத்து மக்களின் மதம், கலாச்சாரம், அடையாளத்தை மதிக்கும் அணுகுமுறையின் ஒரு வெளிப்பாடு ஆகும். NPP அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட இனத்திற்கோ அல்லது மதத்திற்கோ மட்டும் சொந்தமான அரசாங்கம் அல்ல. இது அனைவருடைய அரசாங்கம்.
சிங்கள தமிழ் முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து மக்களின் கலாச்சாரத்தையும் மத உரிமைகளையும் சமமாக மதிக்கும் அரசாங்கம். எமது நாட்டின் பன்முகத்தன்மையை மதித்து, ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடனும், மரியாதையுடனும் வாழ்வதே எமது நோக்கம்.. 🇱🇰
இளங்குமரன் Mp

Post a Comment