சுற்று நிறுபத்திற்கு முரணாக செயற்பட்டு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த வைத்தியசாலை பணிப்பாளர்
இது குறித்த முறைப்பாடொன்று கிடைக்கப்பெற்றதை அடுத்து சமூக நீதிக்கட்சியின் தலைவர் அர்க்கம் முனீர், பொதுச் செயலாளர் சட்டத்தரணி ரஷாத் அஹமத், பொருளாளர் சட்டத்தரணி இல்ஹாம் ஹஸனலி, தேசிய அமைப்பாளர் இர்பான் பன்னா மற்றும் டிஜிட்டல் ஊடக செயலாளர் ஸப்ரீன் அஹமத் ஆகியோர் நேரடி கள விஜயமொன்றை நேற்று (09.08.2026) மேற்கொண்டனர். இதன் போது இப்பிரச்சினையை தீர்க்க முன்னின்று செயற்பட்டு வரும் நற்பிட்டிமுனை அல் அக்ஸா பாடசாலையின் அதிபர் பதியுதீன் அவர்களும் கலந்துகொண்டார்.
இதன்போது பாதிக்கப்பட்ட அரச ஊழியர்களை சந்தித்து பிரச்சினையை கேட்டறிந்து கொண்டதுடன் அவ்வாறு அனுமதி மறுக்கப்பட்டதற்கான எழுத்து மூல பதிலொன்றை பணிப்பாளரிடம் பெற்றுக்கொள்ளுமாறு வழிகாட்டப்பட்டது. அத்துடன் உடனடியாக மனித உரிமை ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடொன்றை மேற்கொள்வதற்கான முயற்சிகளையும் முன்னெடுக்கப்பட்டது.
அத்தோடு இந்த பிரச்சினையை சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ அவர்களின் நேரடி கவனத்திற்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளையும் சமூக நீதிக் கட்சி மேற்கொண்டு வருகிறது.

Post a Comment