20 ஆம் திகதிக்கு முன்னர் வரியை செலுத்த வேண்டும்
2026ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான பெறுமதி சேர் வரியை (VAT) எதிர்வரும் ஆகஸ்ட் 20ஆம் திகதிக்கு முன்னர் செலுத்த வேண்டும் என உள்நாட்டு இறைவரி திணைக்களம் அறிவித்துள்ளது.
வரி செலுத்தத் தவறினால் அல்லது தாமதமாகச் செலுத்தினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
காசோலை, வங்கி வரைவோலை அல்லது கொடுப்பனவு ஆணை மூலம் மேற்கொள்ளப்படும் வரி செலுத்துகை, உரிய காலக்கெடுவுக்குப் பின்னர் கிடைத்தால் அதுவும் தாமதமான செலுத்துகையாகக் கருதப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment