இன்றுமுதல் மீண்டும் ஆரம்பம்
தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த கொழும்பு – தலைமன்னார் ரயில் சேவை இன்று (24) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுகிறது.
அதன்படி, கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து இன்று பிற்பகல் 3.50 மணிக்கு தலைமன்னார் நோக்கி ரயில் புறப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டிட்வா சூறாவளிக்குப் பின்னர் ரயில் சேவை இடைநிறுத்தப்பட்டதால், மன்னார் மாவட்ட மக்கள் நீண்டகாலமாக போக்குவரத்து சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர். குறிப்பாக, கொழும்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வதில் பெரும் சிரமங்கள் ஏற்பட்டிருந்தன.

Post a Comment