கட்டுப்பாட்டை இழந்தமையால் ஏற்பட்ட விபரீதம்
மாத்தறை - வீரவிலயில் பேருந்தும், மோட்டார் சைக்கிளொன்றும் ஒன்றோடொன்று மோதி இடம்பெற்ற விபத்தில் 19 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் 11 ஆண்களும் 8 பெண்களும் அடங்குவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
வீரவில பிரதேச செயலகத்திற்கு அருகில் வைத்து மோட்டார் சைக்கிளுடன் மோதியதுடன், கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மரத்தில் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

Post a Comment