Header Ads



10 மில்லியன் மீட்டர் சீருடையை வழங்கவுள்ள சீனா


இலங்கையின் அரச ம் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்கள் மற்றும் பிக்குகளுக்கான 2027ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைத் துணிகள் சீன அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்படவுள்ளன. 


இந்த விசேட உதவித் திட்டத்தின் கீழ், 2027ஆம் ஆண்டிற்காக இலங்கையில் உள்ள சுமார் 4.18 மில்லியன் பாடசாலை மாணவர்களின் முழுமையான சீருடைத் தேவை பூர்த்தி செய்யப்படவுள்ளது. இதற்காக 10.820 மில்லியன் மீட்டர் அளவிலான பாரிய சீருடை துணியை சீன அரசாங்கம் இலங்கைக்கு முற்றிலும் இலவசமாக நன்கொடையாக வழங்கவுள்ளது. 


இதற்கான உத்தியோகபூர்வ சான்றிதழ்கள் பரிமாற்றம் பத்தரமுல்லை, இசுருபாயவிலுள்ள கல்வி அமைச்சு வளாகத்தில் நடைபெற்றது. 

No comments

Powered by Blogger.