பல்டியடித்த சுமனரதன தேரர்
அத்துடன், தாம் இனிமேல் "ராஜபக்ச நிகாய" (ராஜபக்ஷ முகாம்) என்பதில் இருந்து முற்றாக விலகிச் செயற்படப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சந்திப்பின் பின்னர் அவர் வெளியிட்டுள்ள காணொளி அறிக்கை ஒன்றில் இந்த விடயங்களை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதியின் மட்டக்களப்பு விஜயத்தின் போது அவரைத் தொடர்புகொள்ள தாம் முயற்சிப்பதாகவும், அந்த முயற்சி தோல்வியடைந்தால் அடுத்தகட்டமாகத் தாம் ஒரு தீவிரமான நடவடிக்கையை முன்னோக்கி எடுக்கப் போவதாகவும் முன்னதாக ஒரு செய்தியைப் பகிர்ந்திருந்ததாகத் தேரர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியைச் சந்திப்பதற்கான வாய்ப்பு தமக்குக் கிடைக்கும் என்று தாம் ஆரம்பத்தில் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
தமது முந்தைய செய்தியை அடுத்து, சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் (PSD) அதிகாரிகள் தலையிட்டு, ஜனாதிபதியுடனான சந்திப்புக்குரிய ஏற்பாடுகளைச் செய்துகொடுத்ததாகத் தேரர் தெரிவித்தார்.
இதன் மூலம் இரு தரப்பினருக்கும் இடையில் சுமுகமான கலந்துரையாடலை நடத்த வழிவகை செய்யப்பட்டது.

Post a Comment