Header Ads



பதவி விலகுகிறார் ஹனீப் யூசுப்


மேல் மாகாண ஆளுநர் பதவியிலிருந்து தான் விலகுவதற்குரிய விருப்பத்தை ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாக ஆளுநர் ஹனீப் யூசுப் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.


எனினும், புதிய ஆளுநர் ஒருவர் நியமிக்கப்படும் வரை பதவியில் நீடிக்குமாறு ஜனாதிபதி விடுத்த கோரிக்கையை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.


தனது பதவி விலகல் மற்றும் ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் குறித்து தெளிவுபடுத்தி இன்று (17) அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.