முத்தையா முரளிதரன் கூறியது போல..
இலங்கையின் தற்போதைய கிரிக்கெட் நிலவரம் குறித்து இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க கடும் அதிருப்தியையும் கவலையையும் வெளியிட்டுள்ளார்.
முத்தையா முரளிதரன் கூறியது போல, இலங்கை கிரிக்கெட்டை இனி சீர்திருத்தவோ அல்லது கட்டியெழுப்பவோ முடியாது என்ற நிலையை, தான் ஒப்புக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
இருபதுக்கு 20 கிரிக்கெட்டை 'துரித உணவுடன்' (Fast Food) ஒப்பிட்ட அவர், அது சுவையாகவும் பார்க்க அழகாகவும் இருந்தாலும் ஆரோக்கியமானது அல்ல. டெஸ்ட் கிரிக்கெட் என்பது தாய் அன்புடன் சமைத்துப் பரிமாறும் சத்தான உணவைப் போன்றது என்றும், தெரிவித்தார்.

Post a Comment