ஈரானில் விழுந்த அமெரிக்க போர் விமானி மீட்பு - ட்ரம்ப்
ஈரானால் சுட்டுவீழ்த்தப்பட்ட பின்னர் காணாமல் போன அமெரிக்க விமானப்படையின் F-15E போர் விமானத்தின் ஆயுத அதிகாரி (Weapons Officer) பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது 'Truth Social' சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது:
“நாங்கள் அவரை மீட்டுவிட்டோம்! என் சக அமெரிக்கர்களே, கடந்த சில மணி நேரங்களில் அமெரிக்க இராணுவம் தனது வரலாற்றில் மிகத் துணிச்சலான தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கையொன்றை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.
எமது விமானப்படையின் மிகச்சிறந்த குழு உறுப்பினர்களில் ஒருவரும், மிகவும் மதிப்புமிக்க கேர்ணல் (Colonel) அந்தஸ்து உடையவருமான அந்த அதிகாரி தற்போது முழுமையான பாதுகாப்புடனும் நலமுடனும் உள்ளார் என்பதை உங்களிடம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

Post a Comment