விமான டிக்கெட்டுக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி
மத்திய கிழக்கு நெருக்கடி காரணமாக உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, வானூர்தி எரிபொருள் விலையும் பாரியளவில் உயர்ந்துள்ளது
முன்னதாக ஒரு கலன் (Gallon) 2.25 அமெரிக்க டொலராக இருந்த வானூர்தி எரிபொருளின் விலை, தற்போது 4 டொலரைத் தாண்டியுள்ளது.
இந்த விலையேற்றம் வானூர்தி பயணச்சீட்டுகளின் விலையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். எரிபொருள் விலை அதிகரித்த போதிலும், ஏற்கனவே முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டுகளுக்கான கட்டணங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது
- பிரதி அமைச்சர் ஜனித்த ருவன் கொடித்துவக்கு -

Post a Comment