மத்திய கிழக்கில் தனது இராணுவ பலத்தை இழந்து வரும் அமெரிக்கா
இந்தியா கடைசி நேரத்தில் பின்வாங்கியுள்ளனர். மோடி இஸ்ரேலுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமையும் கவனிக்கத்தக்க விடயமாக மாறியுள்ளது. தமது நாட்டிற்கு அழைக்கப்பட்ட ஈரான் குழுவினர் மீது நீர்மூழ்கிக் கப்பல் மூலம் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது குறித்து இந்திய உளவுத்துறையான ரோவிற்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற சம்பவங்களை முன்கூட்டியே கணிக்கும் திறன் கொண்ட இந்தியா, இந்த ஆபத்தை அறிந்திருந்தும் ஈரான் கப்பலை வெளியேற அனுமதித்தது இந்தியாவின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
மத்திய கிழக்கில் தனது இராணுவ பலத்தை இழந்து வரும் அமெரிக்கா, இஸ்ரேலைத் தவிர்த்து வேறு பாதுகாப்பான தளங்களைத் தேடி வருகிறது. ஈரான் கப்பலைத் தடுப்பதன் மூலம் இலங்கையை ஒரு நேரடி மோதல் களமாக மாற்ற அமெரிக்கா திட்டமிடுகிறதா என்ற அச்சம் தற்போது வலுவடைந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்..

Post a Comment