கொழும்புக்கு அருகாமையில் மற்றுமொரு ஈரானிய கப்பல் - அரசாங்கத்திடமிருந்து தெளிவான அறிக்கை கேட்கும் சஜித்
இலங்கை கடல் எல்லையில், கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில் மற்றுமொரு ஈரானிய கப்பல் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது என்று சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் (5) இடம்பெற்றுவரும் அமர்வின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தற்போது கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் இருக்கும் மற்றுமொரு ஈரானியக் கப்பல் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திடம் இருந்து தெளிவான அறிக்கை ஒன்று தேவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment