ரமழான் (20) கேள்வி
A, நபிகளாரின் மரணத்திற்குப் பின், ஒருமுறை கடும் பஞ்சம் ஏற்பட்டபோது உமர் (ரழி) அவர்கள் ஒரு குறிப்பிட்ட தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார்கள். இஸ்லாமியச் சட்டத்தில் 'சூழலுக்கு ஏற்ப சட்டம் மாறுபடும்' என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம். அந்தத் தண்டனை எது? ஏன் அவர் அதைச் செய்தார்?
B, நபிகளார் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்தவுடன், அங்குள்ள முஹாஜிர்களையும் அன்சாரிகளையும் ஒருவருக்கொருவர் சகோதரர்களாக ஆக்கி வைத்தார்கள். இது ‘சகோதரத்துவ ஒப்பந்தம்’எனப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின்படி, அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்களுக்குச் சகோதரராக நியமிக்கப்பட்ட மதீனாவைச் சேர்ந்த அன்சாரித் தோழர் யார்? (குறிப்பு: அவர் தனது சொத்தில் பாதியைத் வழங்க முன்வந்தவர்).

Post a Comment