Header Ads



நாமலின் இனவாத அரசியல் இனி எடுபடாது - லக்மாலி Mp


ஆளுங்கட்சி எம்.பி. லக்மாலி ஹேமச்சந்திரா நாடாளுமன்றத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச மீது கடும் விமர்சன கருத்துக்களை தெரிவித்துள்ளார்.


 நாடாளுமன்றத்தில் பேசும் போது, லக்மாலி எம்.பி. கூறியதாவது,


"நாமல் ராஜபக்ச இனத்திற்காகவும், மதத்திற்காகவும் முன்னிலை வகிக்கும் அரசியல்வாதி என தன்னைச் சித்தரிக்க முயல்கின்றார்.


ஆனால், தெற்கில் வாக்குக் கேட்டு சிங்கள மக்களின் ஆதரவுடன் நாடாளுமன்றம் வருவதற்கு தற்செயல் துணிவில்லாதவர் இன்று வீரவசனம் பேசி அழைக்கின்றார்.


மக்களைப் பற்றிக் கதைப்பதற்கு அவருக்கு எந்த அருகதையும் இல்லை. நாட்டை நாசமாக்கிய கூட்டமே இப்போது இனவாத அரசியலை முன்னெடுக்க முயல்கின்றது.


சிங்களும் பௌத்தரும் நேர்மையான மக்கள். ஆனால், சிங்களும் பௌத்தரும் எனத் தன்னைச் சித்தரிக்கும் சில அரசியல்வாதிகள் ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர். இனவாதத்துக்கு இனி இடமில்லை. நாமலின் இனவாத அரசியல் இனியும் எடுபடாது." - என்றார்.

No comments

Powered by Blogger.