வங்கதேசத்து தேர்தலில் ஜாமாத் இ இஸ்லாமி தோற்றதில் மகிழ்ச்சி
கடந்த ஒன்றரை ஆண்டுகளில் அவர்கள் (ஜமாத் இ இஸ்லாமி) மூர்க்கத்தனமான ஆதிக்கத்தை வெளிப்படுத்தினர். லட்சக்கணக்கான ஆதரவாளர்களுடன் பேரணிகளை நடத்தினர், நினைத்தபோதெல்லாம் இரவும் பகலும் கும்பல் வன்முறையில் ஈடுபட்டனர், கொல்ல நினைத்தவர்களை சித்ரவதை செய்து கொன்றனர், இந்துக்களின் வீடுகளுக்குத் தீ வைத்தனர், வாக்குக்காக ஒரு பெண்ணைக்கூட அவர்கள் வேட்பாளராக போட்டியிட அனுமதிக்கவில்லை.
பெண்களை மிகவும் வெறுக்கும், உழைக்கும் பெண்களை பாலியல் தொழிலாளிகள் என்று அவமதித்த, பெண்களின் தலைமைக்கு எதிராகப் பேசிய, பெண்களை புர்கா மற்றும் நிகாப் இருளில் தள்ளிய, பெண்களை ஆண்களுக்கான பாலியல் அடிமைகளாகப் பார்த்த, பெண்களுக்கு எதிராக ஷரியத் சட்டத்தை அமல்படுத்த கனவு கண்ட ஒரு கட்சி ஜமாத் இ இஸ்லாமி. இவர்களை ஆட்சிக்கு வர மக்கள் அனுமதிக்கவில்லை. இப்போதைக்கு இதுதான் நல்ல செய்தி’’ என தெரிவித்துள்ளார்.

Post a Comment