Header Ads



சங்காவின் உருக்கமான பதிவு


இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய பின்னடைவுகள் குறித்து குமார் சங்கக்கார தனது கவலையையும் ஆலோசனைகளையும் பகிர்ந்துள்ளார்.


இலங்கை கிரிக்கெட் அணியின்  தோல்விகளால் ரசிகர்கள் ஏமாற்றத்திலும் கோபத்திலும் உள்ளதைப் போலவே, வீரர்களும் மனதளவில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.


நாட்டுக்காக விளையாடுவது என்பது ஒரு கௌரவம் மட்டுமல்ல, அது ஒரு மிகப்பெரிய பொறுப்பு என்று சுட்டிக்காட்டி,  உலக கிரிக்கெட் மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில், நாம் பழைய முறைகளையே பின்பற்றினால் பின்தங்கிவிடுவோம் என அவர் எச்சரித்துள்ளார்.


நாம் மாற்றங்களுக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொள்ளத் தவறினால், சர்வதேச அரங்கில் முக்கியத்துவமற்ற ஒரு அணியாக மாறும் அபாயம் உள்ளது,  இலங்கை கிரிக்கெட் மீண்டும் உலக அரங்கில் எழுச்சிபெற அனைத்து மட்டங்களிலும் மாற்றங்கள் அவசியம் என சங்கக்கார வலியுறுத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.