சஜித் பிரேமதாசவின் மனநிலையை ஆராய வேண்டும் - அமைச்சர் நளிந்த
சஜித் பிரேமதாசவின் கோரிக்கைகளுக்கு பதிலளிப்பதற்கு முன்பு, அரசாங்கம் முதலில் அவரது மனநிலையை ஆராய வேண்டும் என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
சஜித் முன்னதாக கல்வி சீர்திருத்தங்களுக்கு எதிராக மதுகமவில் உள்ள சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கர சிலைக்கு முன்னால் ஒரு போராட்டத்தை நடத்தினார். எனினும், தற்போது அவர் அதே சீர்திருத்தங்களை உடனடியாக செயல்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறார். இந்த கல்வி சீர்திருத்தங்கள் தாமதமின்றி செயல்படுத்தப்படாவிட்டால், எதிர்காலத்தில் சஜித் பிரேமதாச போன்ற நபர்கள் அதிகளவில் உருவாகும் வாய்ப்புள்ளது.
இந்த சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியதற்கு இதுவே மற்றொரு காரணம், புதிய தொகுதிகளில் சுமார் 147 பிரச்சினைகள் இருப்பதாக சஜித் பிரேமதாசவின் தாளத்திற்கு ஏற்ப நாங்கள் செயல்பட முடியாது என தெரிவித்துள்ளார்

Post a Comment