Header Ads



செய்தித்தாளில் வெளியான விளம்பரத்தை பார்த்து


செய்தித்தாளில் வெளியான விளம்பரத்தை பார்த்து, வேலைக்குச் சேர்ந்த பெண்,  ஹம்பாந்தோட்ட, லுணுகம்வெஹெர பிரதேசத்தில் மருத்துவரின் வீட்டிற்கு வேலைக்கு வந்த பெண், வீட்டில் இருந்து 5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


லுணுகம்வெஹெர பிராந்திய மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு மருத்துவரின் வீட்டில் நேற்று இந்தத் திருட்டு நடந்துள்ளது.


சந்தேக நபர் மத்துகம பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். எனினும் குறித்த பெண்ணை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று மருத்துவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.