ருஹுணு தேவாலய பெட்டகங்களில் உள்ள தங்கத்தில் 70 வீதத்தை விற்று 'REBUILDING SRI LANKA' நிதியத்திற்கு நன்கொடை
ருஹுணு கதிர்காம மகா தேவாலயத்தின் பாதுகாப்பு பெட்டகங்களில் உள்ள தங்க கையிருப்பில், தெய்வ உருவம் பொறிக்கப்பட்ட தங்கப் பொருட்கள் தவிர்ந்த ஏனையவற்றில் 70 சதவீதத்தை ஏலத்தில் விற்பனை செய்து, அதன் மூலம் கிடைக்கும் பணத்தை 'REBUILDING SRI LANKA' நிதியத்திற்கு நன்கொடையாக வழங்க கதிர்காம பஸ்நாயக்க நிலமே தீர்மானித்துள்ளார்.
இந்த ஏலமானது இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் மேற்பார்வையின் கீழ் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய வரலாற்றில் பக்தர்கள் நன்கொடையாக அளித்த தங்கத்தை அரசாங்கத்திற்கு வெளிப்படையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Post a Comment