தனி ஒருவரின் மகத்தான பணி
இலங்கையில் பேரிடரினால் பாதிக்கப்பட்ட வீடுகளில் மின் சாதனங்களை இலவசமாக பழுதுபார்க்கும் நடவடிக்கையில் நபர் ஒருவர் ஈடுபட்டுள்ளார்.
மாரவில தொழிற்பயிற்சி கல்லூரியில் ஆலோசகராகப் பணிபுரியும் சுஜித் ஹேரத் என்பவரே இந்த மகத்தான சேவையை செய்து வருகிறார்.
வெள்ளத்தால் சேதமடைந்த பல்வேறு வகையான மின் சாதனங்களை எந்த சேவைக் கட்டணமும் வசூலிக்காமல் திருத்திக் கொடுக்கிறார்.
வெள்ளம் வீடுகளில் உள்ள மின் சாதனங்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் நான் கற்றுக்கொண்டதைக் கொண்டு அவர்களுக்கு உதவ ஏதாவது செய்ய வேண்டும் என்று உணர்ந்தேன்.
அதனால்தான் இந்த சேவையை வழங்க முடிவு செய்தேன். ஏற்கனவே பல்வேறு மின் சாதனங்களை தான் இலவசமாக சரி செய்து கொடுத்துள்ளதாக சுஜித் ஹேரத் தெரிவித்துள்ளார்.

Post a Comment