இன்றைய ஜும்ஆவில் சொல்லப்பட்ட முக்கியமான சில விசயங்கள்
இன்றைய (19) ஜும்ஆ கம்பளை Gate பள்ளிவாசலில், கதீப் அனஸ் முஹம்மத் (நளீமி) சொன்ன கருத்துகள்
♦பாதிக்கப்பட்டோருக்கு மட்டுமல்ல, பாதிக்கப்படாதோருக்கும் சோதனைதான்.
நான் பசித்திருந்தேன் நீ வந்தாயா?
நான் வீடிழந்திருந்தேன் நீ வந்தாயா?
நான் தேவையோடு இருந்தேன் நீ வந்தாயா?
மறுமையில் இறைவன் கேட்பான்.
இந்தக் கேள்விகளுக்கு நாம் தயாராக வேண்டும்.
♦பாதிக்கப்பட்டோரைத் தேடி உதவி செய்வோம்.
♦சோதனைகள்-அழிவுகள் மூலம் படிப்பினை பெறுவோம்.
♦தகவல்களைத் திரட்டுவோம். சரியாக திட்டமிட்டு மீளகட்டியெழுப்புவோம்.
ஜும்ஆவில் அறிவித்தவை:
சுத்திகரிக்க வந்தோர் பெறுமதியான நகைகளை பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளனர். அடையாளம் சொல்லி அதைப் பெற்றுக் கொள்ளா முடியும்.
சுத்திகரிப்புப் பணியிலும், நிவாரண நடவடிக்கைகளிலும் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி சொன்னார்கள்.
Siraj Mashoor

Post a Comment