Header Ads



இருநாட்டு தலைவர்களும் தொலைபேசியில் பேச்சு


ஐக்கிய அரபு எமிரேட்ஸின்  மனிதாபிமான உதவிக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நன்றி தெரிவித்துள்ளார்.


இன்று (19) ஐக்கிய அரபு எமிரேட்ஸ்  ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் நடைபெற்ற தொலைபேசி உரையாடலின் போது ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்தார், நெருக்கடி காலங்களில் இலங்கைக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அளித்த தொடர்ச்சியான ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார்.


இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவுக்கு ஏற்ப கூடுதல் ஆதரவை ஆராய்வதற்காக, சேதத்தின் அளவை மதிப்பிடுவதற்கும் வழங்கக்கூடிய உதவியின் தன்மையைத் தீர்மானிப்பதற்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இலங்கைக்கு ஒரு குழுவை அனுப்பும் என்றும் ஐக்கிய அரபு எமிரேட் ஷேக் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.