பேருந்து விபத்து: 14 பேர் வைத்தியசாலையில் அனுமதி!
இவ்வருடத்தின் ஜனவரி முதலாம் திகதி முதல் நேற்று (24) வரையான காலப்பகுதியில் கடல் மார்க்கமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 99 படகுகள் மற்றும் பலநாள் மீன்பிடிப் படகுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, 360 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் நேற்று வரை, கடற்படை 4,000 கிலோகிராம் ஐஸ் மற்றும் ஹெரோயினை பறிமுதல் செய்துள்ளது.
அவற்றில், 2,982 கிலோகிராம் 600 கிராம் ஐஸ் மற்றும் 1,050 கிலோகிராம் 100 கிராம் ஹெரோயின் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
மேலதிகமாக, 33 கிலோகிராம் ஹஷிஷ், 1,683,722 போதைப்பொருள் மற்றும் 5,900 கிலோகிராம் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

Post a Comment