புத்தளம் விவகாரம் - 6 மாதங்களுக்குள் உடனடி நடவடிக்கைக்கு ஜனாதிபதி உத்தரவு
புத்தளத்தின் பிரச்சினைகள் தொடர்பாக ஹிஸ்புல்லாஹ் Mp சுட்டிக் காட்டி உரையாற்றிய போது, ஜனாதிபதி அநுரகுமார பாராளுமன்றத்திலேயே இருந்துள்ளார்.
பின்னர், புத்தளம் Mp பைசல், ஹிஸ்புல்லாஹ் Mp பகல் உணவுக்காக பாராளுமன்ற சிற்றூண்டிச்சாலைக்கு சென்றபோது, அங்கே பகல் உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்த ஜனாதிபதி, பைசல், ஹிஸ்புல்லாஹ் அவர்களை அருகே அழைத்து ஹிஸ்புல்லாஹ்வின் புத்தளம் சம்மந்தமான உரையை பாராட்டியுள்ளார்.
தான் புத்தளம் சென்றபோது அங்கே அவர்களுக்கு வைத்தியசாலை தொடர்பாக வாக்குறுதி வழங்கியதாகவும், அதனை அவர்களுக்கு செய்து கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
புத்தளம் பைசல் Mp “ஆம், அது எங்களுக்கும் மிகப்பெரிய பிரச்சினை. அதனை தரமுயர்த்தி தருவதாக நீங்களும் வாக்குறுதி வழங்கினீர்கள், இன்னும் பிரதமர் அவர்களும் வந்தபோது வாக்குறுதி வழங்கினார், எனவே அதனை செய்து தாருங்கள்” என கேட்டபோது,
அங்கே இருந்த சுகாதார அமைச்சரை ஜனாதிபதி அழைத்து “இன்னும் 6 மாதங்களுக்குள் புத்தளம் தல வைத்தியசாலை தரமுயர்த்தப்பட வேண்டும், அதற்காக என்ன செய்ய வேண்டுமோ அதனை உடனடியாக செய்யுங்கள் என உத்தரவிட்ட போது, இல்லை என ஏதோ காரணம் சொல்ல சுகாதார அமைச்சர் முற்பட்ட போது, எதுவும் சொல்லாமல் 6 மாதங்களுக்குள் இது நடக்க வேண்டும், நிதி போதாவிட்டால் சொல்லுங்கள் அதனை நான் தருகின்றேன் எனவும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Post a Comment