Header Ads



குர்ஆன் தொடர்பில் பிரச்சனை கிடையாது, சுங்கச் சட்டங்களை மீறியே இறக்குமதி - விஜித ஹேரத்


இலங்கை சுங்க திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள புனித குர் ஆன் நூல்களை மீண்டும் இந்தியாவிற்கே திருப்பி அனுப்பி வைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


புனித குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்பு நூல்களே இவ்வாறு மீண்டும் இந்தியாவிற்கு அனுப்பி வைக்க அதனை இறக்குமதி செய்தவர் இணங்கியுள்ளதாக வெளிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.


செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் விஜித இதனை தெரிவித்துள்ளார்.


இந்த புனித குர்ஆன் நூல்கள், இலங்கை சுங்கத்திணைக்களத்தின் சுங்கச் சட்டங்களை மீறும் வகையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


இதனால் குறித்த புனித குர்ஆன் நூல்கள் சுங்கத்திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.


இதனால் குறித்த புனித குர்ஆன் நூல்களை இந்தியாவிற்கே ஏற்றுமதி செய்வதற்கு குறித்த இறக்குமதியாளர் இணங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


புனித குர் ஆன் நூலின் உள்ளடக்கம் தொடர்பில் எவ்வித பிரச்சனைகளும் கிடையாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.