மதுபோதையில் யாழ்தேவியை ஓட்டிய நடத்துனர்
காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் செல்லும் யாழ்தேவி விரைவு ரயிலின் தலைமை நடத்துனர் சனிக்கிழமை (25) மாலை அனுராதபுரம் ரயில் நிலையத்தில் மது போதையில் பணியில் இருந்தபோது ரயில்வே பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
அனுராதபுரம் காவல்துறையிடம் அவரை ஒப்படைத்த பிறகு, நீதித்துறை மருத்துவ அதிகாரியிடம் அறிக்கை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அனுராதபுரம் காவல்துறை தெரிவித்துள்ளது.
வேறொரு நடத்துனர் பணியமர்த்தப்பட்ட பின்னர் யாழ்தேவி ரயிலை கொழும்பு நோக்கி இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ரயில்வே பாதுகாப்புப் பிரிவு கூறுகிறது.

Post a Comment