வெலிகம பிரதேச தலைவர் கொலை - கைதுசெய்ய மக்களின் உதவியை கோரியுள்ள பொலிஸ்
வெலிகம பிரதேச சபை தலைவர் கொலை தொடர்பில் தேடப்படும் நபரைக் கைதுசெய்ய பொலிஸ், மக்களின் உதவியை கோரியுள்ளது.
அநுராதபுரம் - கெகிராவ பொலிஸ் பிரிவின் இக் குற்றத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மறைந்திருப்பதாக தகவல் கிடைத்து, அப்பிரிவின் அதிகாரிகள், பொலிஸ் அதிரடிப்படையினர், இராணுவ உதவியுடன், இன்று (26) அதிகாலையில், கைவிடப்பட்டிருந்த ஒரு வீட்டைச் சோதனையிட்டனர்.
இதன்போது, பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் இருந்த மேலும் சில நபர்கள் பொலிஸாருடன் முரண்பட்ட நிலையில், அதில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு குற்றத்திற்குப் பயன்படுத்திய ஒரு மோட்டார் சைக்கிள்,12 இலட்சத்துக்கும் அதிகமான பணம், ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் பாவனைக்காக பயன்படுத்தப்படும் உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன், பொலிஸ் அதிகாரிகளுடன் சண்டையிட்டு தப்பிச் சென்ற, அங்குலுகம பகுதியைச் சேர்ந்த ஹக்மன பரநலியனகே நுவன் தாரக என்பவரைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.
இந்த சந்தேகநபர் சுமார் 5 அடி 6 அங்குலம் உயரமானவர் மற்றும் வலது கையின் மேல் பகுதியில் ஆங்கிலத்தில் “ANURADA” என்றும், இடது கையில் “හිතුමතේ ජීවිතේ” (சுயாதீன வாழ்க்கை) என்றும் பச்சை குத்தியுள்ளார்.
இந்த சந்தேகநபரின் புகைப்படங்கள் உங்களுடன் பகிரப்படுகின்றன. இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தால், பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.
பொலிஸ் மா அதிபருக்கு தெரிவிக்க (WhatsApp) - 071 859 8888 நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு - 011 233 7162 / 071 859 2087
.jpeg)
Post a Comment