முஸ்லிம் தாதியர்கள் தங்கள் விருப்பப்படி மத அடையாள சீருடைகளை மாற்றிக்கொள்ள ஆட்சேபம்
முஸ்லிம் தாதியர்கள் தங்கள் விருப்பப்படி மத அடையாள சீருடைகளை மாற்றிக்கொள்ள, அமைச்சர் விஜித அனுமதித்ததை, இலங்கை தாதியர்கள் சங்கம் ஆட்சேபித்துள்ளது. அமைச்சரின் கூற்று தவறானது என்றும், தாதியர் சீருடைகளில் அத்தகைய மாற்றத்தை அனுமதிக்கும் அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை என்றும், சங்கத்தின் தலைவர் W.A. கீர்த்திரத்ன கூறியுள்ளார்.
அமைச்சரின் அறிக்கை சுகாதாரத்துறைக்குள் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும் என்று சங்கம் குறிப்பிட்டுள்ளது. புளோரன்ஸ் நைட்டிங்கேலின் காலத்திற்கு முந்திய செவிலியர் சீருடை, தொழில்முறையின் உலகளாவிய சின்னமாகும், அது, குறித்த கலாசார அல்லது மத பிரதிநிதித்துவத்தின் அடையாளம் அல்ல என்று கீர்த்திரத்ன வலியுறுத்தினார்.
சுகாதார அமைச்சின் சீருடை குழு மற்றும் இலங்கை செவிலியர் சபையால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே உடையாக உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
பல முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகளுடன் சமீபத்தில் நடந்த சந்திப்பின் போது, முஸ்லிம் தாதியர்கள் மத உடைக் குறியீடுகளைக் கடைப்பிடிப்பதற்கு எந்த சட்டத்தடைகளும் இல்லை என தீர்மானிக்கப்பட்டிருந்ததுடன், அதுபற்றி சிக்கல்கள் எழுந்தால் முறையிடுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது குறித்து ஏற்கனவே www.jaffnamuslim.com இணையம் தகவல் பதிவேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment