Header Ads



புதிய சட்­ட­திட்­டங்கள் - ஜனாஸா நல்­ல­டக்க செயற்­பா­டு­களை மேலும் பாதிப்­ப­டை­யச்­செய்யும்


திடீர் மரண விசா­ர­ணைகள் தொடர்­பி­லான புதிய சட்­ட­திட்­டங்கள் சாதா­ரண மக்­களை மேலும் சிர­மப்படுத்தும். அத்­துடன், குறிப்­பாக முஸ்­லிம்­களின் ஜனாஸா நல்­ல­டக்க செயற்­பா­டு­களை மேலும் பாதிப்­ப­டை­யச்­செய்யும் என தேசிய ஷூரா சபை சுட்டிக்காட்டியுள்ளது.


மேலும், தற்­போது நடை­மு­றையில் உள்ள திடீர் மர­ணங்கள் குறித்து திடீர் மரண விசா­ரணை அதி­கா­ரி­களால் மேற்­கொள்­ளப்­படும் மரண விசா­ர­ணை­களை நீதித்­து­றைக்கு சுமத்தி, ஏற்­க­னவே நெருக்­க­டி­யான பணிச்­சு­மையில் உள்ள நீதவான் நீதி­மன்­றங்­களை மேலும் நெருக்­க­டிக்­குள்­ளாக்­க­வேண்டாம் என தேசிய ஷூரா சபை நீதி­ய­மைச்சர் ஹர்ஷ நாண­யக்­கா­ர­விடம் வேண்­டு­கோள்­வி­டுத்­துள்­ளது.


தேசிய ஷூரா சபையின் தலைவர் எம்.எம். ஸுஹைர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி மற்றும் பொதுச் செய­லாளர் சட்­டத்­த­ரணி ரஷீத் எம். இம்­தியாஸ் ஆகியோர் ஒப்­ப­மிட்டு நீதி­ய­மைச்­ச­ருக்கு அனுப்­பி­யுள்ள கடி­தத்­தி­லேயே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.


அக்­க­டி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, குற்­ற­வியல் நடை­முறைச் சட்­டத்தின் பிரிவு 370(3) இன் கீழ், குற்­ற­வியல் உட்­பட குற்றம் கவ­னக்­கு­றைவு பற்­றிய நியா­ய­மான சந்­தேகம் உள்ள சந்­தர்ப்­பங்­களில் மாத்­திரம் நீதவான் நீதி­மன்­றங்­களில் மரண விசா­ர­ணை­களை மேற்­கொள்ள வேண்டும் என்ற நடை­முறை தொடர வேண்டும் எனவும் திடீர் மரண விசா­ரணை அதி­கா­ரி­க­ளின் பணிச்­சு­மையை நீதவான் நீதி­மன்­றங்­களின் மீது திணிக்க வேண்டாம்.


சட்­டத்தை மக்கள் இல­கு­வா­ன­தா­கவும், பொது­மக்­க­ளுக்கு செலவு குறைந்­த­தா­கவும், நீண்­ட­கால சட்ட தாம­தங்­களைக் குறைப்­ப­தான நீதி அமைச்சின் முயற்­சி­களை வர­வேற்­கிறோம். இருப்­பினும், பரிந்­து­ரைக்­கப்­ப­ட­வி­ருக்கும் சில புதிய திட்­டங்கள் சட்ட தாம­தங்­க­ளுக்கு மேலும் வழி­வ­குக்கும். அத்­துடன் நீதி­மன்­றங்கள் மூல­மான பிரேத விடு­விப்பு நடை­மு­றை­யா­னது துய­ரத்தில் உள்ள குடும்­பங்­க­ளுக்கு அதிக செலவை ஏற்­ப­டுத்தும்.


99% திடீர் மர­ணங்கள் இயல்­பான மர­ணங்­க­ளா­கவே கடந்­த­கால புள்­ளி­வி­ப­ரங்கள் உறு­திப்­ப­டுத்­து­கின்­றன. எனவே, சந்­தே­கிக்­கு­ம்­ப­டி­யான 1%க்கும் குறை­வான மர­ணங்­களின் விதி­வி­லக்­கான வழக்­கு­க­ளுக்கு மாத்­தி­ரமே தேவைப்­படும் நீதவான் நீதி­மன்ற விசா­ர­ணைகள் மற்றும் பிரேதப் பரி­சோ­த­னைகளுக்கு (Post Mortems) இந்த 99% ஆன­வர்­களும் உட்­ப­டுத்­தப்­ப­டு­வது நியா­ய­மற்­றது. மேலும் இவ்­வா­றான புதிய சட்­ட­திட்­டங்கள் நடை­மு­றையில் உள்ள இல­கு­வான நடை­மு­றை­மையை விட மேலும் கடி­ன­மாக்­கு­வ­துடன் துய­ரத்தில் உள்ள குடும்­பங்­களை மேலும் சிர­மப்­ப­டு­த்து­கின்­றது. குறிப்­பாக முஸ்­லிம்­களின் ஜனாஸா நல்­ல­டக்க செயற்­பா­டு­களில் இவை மேலும் பாதிப்­ப­டை­யச் ­செய்யும்.


பிரேத பரி­சோ­த­னைகள் அர­சாங்­கத்­திற்கு அதி­க­பட்ச கூடுதல் நிதியைச் செல­விட வ­ழிவகுக்­கின்­றன. அத்­துடன் துய­ரத்­தி­லுள்ள குடும்­பங்­க­ளுக்கும் கூடுதல் செல­வு­களை ஏற்­ப­டுத்­து­கின்­றன. இறந்த மனித உடல்­க­ளுக்கும் சர்­வ­தேச சட்­டங்கள் மற்றும் வழக்­க­மான மத நடை­மு­றை­களின் கீழ் மரி­யாதை மற்றும் கண்­ணியம் அவ­சியம். எல்லா மதங்­களும் இறந்­த­வர்­க­ளுக்கு கண்­ணி­ய­மான இறுதிச் சடங்­கு­களை வலி­யு­றுத்­து­கின்­றன.


எனவே, அர­சாங்கம் நீதவான் நீதி­மன்­றங்­களை மேலும் சுமைப்­ப­டுத்­தாமல், மாறாக திடீர் மரண விசா­ரணை அதி­கா­ரி­களை தொழி­லாளர் பிணக்­குகள் சபையின் ஆணை­ய­ாளர்­க­ளுக்கு இணை­யான வச­தி­க­ளுடன் மேம்­ப­டுத்த வேண்டும். அத்­துடன், புதிய நிய­ம­னங்­க­ளுக்கு நியா­ய­மான ஊதியத்துடன் கூடிய கல்வித் தகைமைகளை கொண்டவர்களுக்கு வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.


அர­சாங்­கத்தின் வாக்­கு­று­திக்­கேற்ப, தற்­போ­துள்ள சட்­டங்­களில் மாற்­றங்கள் சட்ட தாம­தங்­களைக் குறைத்து, செயல்­மு­றையைச் செலவு குறைந்­த­தா­கவும், திடீர் மரண விசா­ரணை அதி­கா­ரி­களை மக்கள் நம்­பக்­கூ­டி­ய­தாக மாற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. – Vidivelli

No comments

Powered by Blogger.