Header Ads



பிரசவத்தின் போது இரட்டை சிசுக்களும் தாயும் உயிரிழப்பு


யாழ். போதனா வைத்தியசாலையில் இரட்டை சிசுக்கள் அறுவைச் சிகிச்சை மூலம் பிரசவித்த போது உயிரிழந்த நிலையில் மயக்கமடைந்த நிலையில் இருந்த தாயும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


இவ்வாறு உயிரிழந்தவர் சோமசுந்தரம் வீதி ஆனைக்கோட்டையைச் சேர்ந்த நிமலராஜ் சாருமதி (வயது 28) என்ற இளம் தாயாவார்.


கடந்த 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மேற்படி கற்பவதியான தாய்க்கு வலிப்பு ஏற்பட்ட நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அறுவைச் சிகிச்சை மூலம் இரு சிசுக்கள் பிரசவிக்கப்பட்ட போது ஒரு சிசு இறந்தும் மற்றைய சிசு சில மணி நேரத்திலும் இறந்துள்ளது.


மயக்கமடைந்த நிலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வந்த தாய் சிகிச்சை பலனின்றி நேற்று (26) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


இம் மரணம் தொடர்பில் யாழ். மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஆறுமுகம் ஜெயபாலசிங்கம் விசாரணைகளை மேற்கொண்டார். சாட்சிகளை மானிப்பாய் பொலிஸார் நெறிப்படுத்தினர்.


பிரேத பரிசோதனையில் இறப்பிற்கான காரணம் கண்டறிய உடற்கூற்று பாகங்கள் இரசாயண பகுப்பாய்விற்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.