Header Ads



ரமழான் நோன்பு ஆரம்பிக்கும் தினத்திலேயே O/L பரீட்சை


ரமழான் நோன்பு ஆரம்பிக்கும் தினத்திலேயே O/L பரீட்சை. கல்வி அமைச்சும், பரீட்சைகள் திணைக்களமும் கவனம் செலுத்த வேண்டும்.


2025 ஆம் கல்வி ஆண்டிற்கான க.பொ.த. சாதரண தரப்பரீட்சையும் 1447 ஆம் ஹிஜ்ரி வருடத்திற்கான புனித ரமழான் நோன்பும் ஒரே தினத்தில் ஆரம்பமாகின்றன. இது, பரீட்சைக்கு தோற்றும் முஸ்லிம் மாணவர்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும். எனவே இது விடயத்தில் கல்வி அமைச்சும் பரீட்சைகள் திணைக்களமும் கவனம் செலுத்த வேண்டும் என திருகோணமலை மாவட்ட இம்ரான் மகரூப் தெரிவித்தார். 


2025 ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராத சாதாரண தர பரீட்சைக்கான தினத்தை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கு அமைய சாதாரண தர பரீட்சை 2026 பெப்ரவரி 17 ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நடைபெறும் என்று பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.