அரசாங்கத்தின் முடிவு, நாமல் எழுப்பியுள்ள கேள்வி
சுற்றுலாப் பயணிகளுக்கு ஓட்டுநர் உரிமங்களை வழங்கும் அரசாங்கத்தின் முடிவு நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார். இது சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் வாகன ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
வழிகாட்டுதல் மற்றும் போக்குவரத்து சேவைகளை நம்பியுள்ள ஆயிரக்கணக்கானோர் பணிபுரியும் சுற்றுலாத் துறையில் முக்கிய பங்குதாரர்களுடன் கலந்தாலோசிக்காமல் இந்தக் கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளதாக நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்களின் கீழ் சர்வதேச ஓட்டுநர் உரிமங்களை அங்கீகரித்துள்ளதைக் குறிப்பிட்ட அவர், அத்தகைய உரிமம் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இந்தச் சலுகை வழங்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment